வ.உ.சி. சேவா தளம் நடத்திய, வேளாளர் குல திலகம், மேனாள் ஆளுநர், உச்சநீதிமன்ற நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி சிறப்பாக சென்னை, ஜோடியாக் ரெக்ரேஷன் கிளப்பில், இன்று (27 12 2021) மாலை 5.30 மணிநடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வ.உ.சி. சேவா தளத்தின் தலைவர் திரு. வேளாளர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமை வகித்தார். உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள், திரு கே.பாஸ்கர் அவர்கள் மற்றும் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திரு செங்குட்டுவன் அவர்களும், திரு கே ஆர் ராஜவேல் அவர்களும் முன்னிலை வகித்தனர்.சிறப்புரையாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர் எஸ் பாரதி அவர்கள் நிகழ்த்தினார். முன்னதாக திரைப்பட தயாரிப்பாளர் திரு கே ராஜன் அவர்கள் முன்னுரையை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.
![7 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t39.30808-6/269744099_2439590012840544_5525869479570474448_n.jpg?_nc_cat=110&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=Sp1JWHVj1hMAX_Xnt32&_nc_oc=AQk6sPJeltHdrsQRbRfa_bxGhKAPressgtc_4NjPIu-Oedipzmd-1I0bFdVrUaLzBrs&_nc_ht=scontent.fmaa1-1.fna&oh=00_AT-NcUtJ9H97UEt4XM6RovOzp-XS3-OxnpC5lSooREJtXA&oe=61D02C81)
புகழ் அஞ்சலியாக திரு ஆறுமுகம் பிள்ளை, திரு முருகேசன் பிள்ளை, திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திரு w.p. பழனி, திரு ரவீந்திரன், திரு. ராஜு, திரு ராஜா செல்லப்பா, திரு ரவிராஜ் மாதவன், கேவி சுகுமாரன், வழக்குரைஞர் ராஜரத்தினம் அவர்கள், திரு சிவ தேசிகன் பிள்ளை அவர்கள், வழக்குரைஞர் இளங்கோவன் அவர்கள், ஆகியோர் ஐயா மோகன் அவர்களுக்கு மலர்தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியை வ.உ.சி. சேவா தளம் நிர்வாகத் தலைவர் சிந்து ஆறுமுகம் வழி நடத்தினார். நன்றி உரையை திரு விஜயகுமார் அவர்கள் நிகழ்த்தினார்.
![5 பேர் இன் படமாக இருக்கக்கூடும்](https://scontent.fmaa1-3.fna.fbcdn.net/v/t39.30808-6/270042936_2439590019507210_3072253967051270575_n.jpg?_nc_cat=101&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=1qVxPMcatfIAX9utkii&_nc_ht=scontent.fmaa1-3.fna&oh=00_AT822N5GGJ8j8JSCzrYcMmFhJjl5KEVnSd4UbbMY8UZGOA&oe=61CEE144)